Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறவைகள், விலங்கினங்கள், பாதுகாப்பு குறித்து பழவகை மரகன்று நடும் விழா

ஆகஸ்டு 25, 2019 10:27


பல்லாவரம்: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருபாணந்தா ஏரியில் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வில்சன் குமார் தலைமையில் எதிர்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அழியாமால் பாதுகாப்பாக இருக்க திருபாணந்தா ஏரியை சுற்றிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவுசெய்தனர். 

இதுபோன்று அனைத்து ஏரிகரைகளிலும் பழவகை மரகன்றுகளை பொதுமக்களும், இளைஞர்கள் நடவுசெய்ய முன்வர வேண்டும். இதனால் பருவநிலை மாற்றங்களை காப்பற்றி வரும்கால சந்ததியினருக்கு பயன்படும் வகையில் அமையும் என சமூக ஆர்வலர்களும், தன்னார்வளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்